Posts

Showing posts with the label கட்டுரை விவேகானந்தர்

துறவிலும் துரத்தும்

Image
         துறவிலும் துரத்தும்  வீரத்துறவி விவேகானந்தர் பற்றிய செவிவழிச் செய்திகள் பல தற்போதைய சமூகத்தில் பெரும்பாலும் உலவுவதைக் காண்கிறோம். அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தில் உரையாற்றுகையில் " சகோதர , சகோதரிகளே " எனக் கூறியதும் அங்கிருந்த மக்கள் ஆரவார ஒலியெழுப்பி நெகிழ்ந்ததாக வரலாறு சொல்லப்படுகிறது. அப்படி சிலரது வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகளைைக் கேட்க கேட்க மேலும் தெரிந்து கொள்ள ஆர்வம் ஏற்படுவது மனித இயல்பு. அப்படியான ஆர்வம் ஏற்படும் போது தேடிப் படிப்போம் , கேட்போம் . தெரிந்து கொண்டதைப் பிறரிடத்தில் சொல்வோம். அவ்வாறாக சுவாமி விவேகானந்தர் பற்றி அறிந்த நிகழ்வு ஒன்றையும் கூறுகிறேன். காசிக்குப் பயணம் மேற்கொண்டு விவேகானந்தர் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தார். வழியில் மரத்தின் நிழலில் அமர்ந்து கிராமத்துக்காரர் ஒருவர் ஹூக்கா வைக் கொண்டு புகைப்பிடித்துக் கொண்டிருக்க சுவாமிக்கும் புகைக்க வேண்டும் என்ற எண்ணம் வரவே , அவரிடம் சென்று கேட்ட போது , " சாமி , நான் துப்புரவுத் தொழிலாளி , நீங்க நான் உபயோகப்படுத்துனத எப்டி சாமி ? " என்று சொன்னதும் விவேகானந்தரும் அவ்விட