Posts

Showing posts with the label எழுத்து

நாயைப் பார்த்தும் பொறாமையா !?

Image
எழுத்து எப்படி ஒருவரின் உணர்வோடு தொடர்புடையதோ அதே போலத்தான் புகைப்படங்களும் ஓவியங்களும் ஒரு உள்ளார்ந்த அர்த்தத்தை உணர்வோடு கொண்டிருக்கும் . அப்படி ஒரு புகைப்படத்தைப் பார்த்ததும் அதனுடனான அல்லது அது குறித்தான நினைவுகள் எல்லோருக்கும் வரத்தான்  செய்யும் . மனிதனுக்கு இருக்கிற சுயநலத் தேவைகளின் நினைப்பும் , நாய்க்குத் தனக்கு அன்பானவரிடம் பொழுதைக் கழிக்க வேண்டுமென்கிற நினைப்பும் இந்தப் புகைப்படத்தில் காட்டப்படுகிறது. அப்படியிந்தப் புகைப்படத்தைப் பார்த்ததும் ருஷ்ய எழுத்தாளர் அந்தோன் சேகவ் எழுதிய சிறுகதையில் ஒரு கதாப்பாத்திரம் பேசுகிற வசனம் தான் நினைவுக்கு வருகிறது . பனிக்கட்டிகள் உறைந்திருக்கும் அழகிய பொழுதில்  முதியவர் ஒருவர் தனக்கென இருக்கும் நிலத்தில் ஒரு பள்ளிக்கூடத்தைக் கட்ட வேண்டுமென்கிற ஆவலைத் தனது நண்பரிடம் தெரிவித்து அதில் என்னென்ன மாதிரியான அம்சங்கள் அதாவது ஆய்வகங்கள் , விவசாயம் பற்றிய ஆய்வகம் , இசை , நூலகம் என அனைத்து வசதிகளும் பொருந்திய ஒன்றாக அமைய வேண்டுமென்கிற விளக்கத்தைத் தருகையில் அவர் சொல்கிறார் , எல்லாவற்றையும் குறித்த தெளிவு ஒரு ஆசிரியருக்கு இருக்க வேண்டும் அப்