Posts

Showing posts with the label சமத்துவம்

"கொட்டப்படாத குப்பைகள் "

Image
"குப்பைய போய் கொட்டிட்டு வா " "அப்புறம் குப்பை வண்டி திரும்ப வாரது "   " போட எழுந்து போ ..." தெருமுனையில் இருந்து விசில் சத்தம் கேட்டவுடன் அதனைத் தொடர்ந்து ஒலிக்கும் வசனங்கள் தான் இவை அம்மா  செல்வியிடமிருந்து . குப்பைகளை ஏழு மணிக்குள்ளாகச் சேகரிக்க டிரைசைக்கிளை இழுத்துக்கொண்டும் ,  தெருவைச் சுத்தம் செய்யும் பணியிலும் ஈடுபடும் துப்பரவுத் தொழிலாளியிடமிருந்து வரும் சமிக்கை தான் அந்த விசில் சத்தம்.குப்பைத்தொட்டியைக் கையில் எடுத்துக்கொண்டு முகங்கூடக் கழுவாமல் கண்கள் சொக்கியவாறே அரைகுறைப் பார்வையில் தெருமுக்கு வரை நடந்து சென்று குப்பையை வண்டியில் கொட்டிய பின் தூக்கம் தெளிந்து அந்தத் துப்புரவுத் தொழிலாளி முருகனின் முகத்தில் விழித்தே மணிகண்டனின் நாள் துவங்கிடும் குப்பைக் கொட்ட வரும் எல்லோருக்கும் அதே மாதிரியாகத் தான் என்றும் கூட சொல்லலாம். ஆனால் அவரை யாரும் பெரிதாகக் கண்டு கொள்வதில்லை , கேட்பாரற்ற யாரோ ஒருவரின் இடிந்த பழைய கட்டடம் ஒன்று உள்ளது அந்தப் பகுதியில் , அங்கு தான் அவர் வேலைகளை முடித்துவிட்டு இதரப் பொழுதுகளைக் கழிப்பார்  . தினசரி அவரவர்க்கு அமை