Posts

Showing posts with the label தத்துவம்

முழுமையற்ற இயற்கையின் முன் ...

Image
" பழுத்த இலைகள்  பூச்செடியின் அழகைக் கெடுப்பதாக  நினைக்கும் பொழுதுகளில் ஏனோ... முழுமையற்ற இயற்கையின் முன் இரசனை கெட்டவர்களாகி விடுகிறோம் "                                            - ச. குரு பிரசாந் இயற்கையின் அழகு அதன் முழுமையற்ற , பூரணமற்றத் தன்மையில் தான் இருக்கிறது என்பதை உணர்த்தும் இந்தக் கவிதையை நான் எழுதுகையில் சகிப்புத்தன்மையையும் , சகமனிதச் சிநேகத்தையும் இந்த இயற்கைச் சூழலும் , நாகரிகங்களும், பண்பாடுகளும் , மதங்களும் அடுத்தடுத்த தலைமுறை மனிதர்களுக்கு (நமக்கு) எந்தெந்த வகைகளில் கற்றுத்தர முயல்கின்றன என்பதைக் குறித்து யோசிக்கும் சமயத்தில் சில நாள்களுக்குப் பிறகு ஒரு ஜப்பானிய தத்துவம் குறித்தான சிறு அறிமுகம் கண்ணில் தட்டியது .  ஜப்பானில் உள்ள சின்னச் சின்ன தீவுகளில் உள்ள கிராம மக்கள் இந்த நவீன உலகிலும் உலகமயமாக்கலுக்குப் பிறகும் கூட தங்களுடைய மரபுகளை , பண்பாட்டை , கலாச்சாரத்தை , மேலும் தங்களுக்கே உரித்தான சடங்குகளைப் பின்பற்றி மதங்களின் ( ஜப்பானியர்கள் பின்பற்றும் மதங்கள் ஷின்டோ , கன்பூசியம், ஜென் ) பழமை மாறாமல் அதே சமயத்தில் முற்போக்கான சிந்தனையுடன் பின