எங்கே நிம்மதி?
வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் வெவ்வேறு விதமான மனிதர்களைக் காலம் அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கும். அந்தந்த நேரங்களில் நமக்கு எது ஒன்றையும் குறித்த புரிதலை மேம்படுத்துவதற்காகவும், ஏதோ ஒன்றை உணர்த்துவதற்காவும், வாழ்நிலை மேம்பாட்டிற்கும் காலம் நிகழ்த்தும் ஒரு நிகழ்வு. நமது திறமைகளை, நிறைகுறைகளைக் கண்டு சொல்பவர், வழிகாட்டி, முன்மாதிரி என்று பலவிதமான மனிதர்களை நித்தம் சந்தித்த வண்ணம் இருக்கிறோம். இதில் சில மனிதர்கள் நம்மை அறியாமலேயே நமக்குள் ஏற்படுத்திப் போகும் தாக்கம் கவனிக்கத்தக்க ஒன்று. சமீபத்தில் எனக்குப் பரிச்சயமான சில நபர்களிடமிருந்து அந்த மாதிரியான புரிதலையும், சிலவற்றைக் குறித்த பார்வையையும் விசாலப்படுத்திக் கொள்ளமுடிந்தது. அப்படி நான் சந்தித்த ஒருவர் இரயில்வே துறையில் அரசுப் பணியாளராக உள்ளவர், இருந்தும் நூலகத் துறையின் மீது விருப்பம் கொண்டு தொலைநிலைக் கல்வியில் நான் பயிலும் அதே ஆண்டில் என்னோடு வகுப்பிற்கு வந்திருந்தார். அரசுப் பணிக்காக இலட்சக்கணக்கில் பலர் போட்டித் தேர்வுக்குப் பல வருடங்கள் தயாராகிக் கொண்டும், கிடைத்துவிடாதா என்று எதிர்பார்த்திருக்க நீங்கள் அது கிட...