Posts

Showing posts with the label உதிரும் மாந்தர்கள்

உதிரும் மாந்தர்கள்

Image
                                                      தினமும் இரவு பதினொரு மணிக்கு மேலும் கூட பச்சை நிற கட்டிடத்தின் முதல் மாடியில் உள்ள ஒற்றை வீட்டில் மின்விளக்குகளும் , தொலைக்காட்சியும் எப்போதும் இயங்கியவாறே இருக்கும் ‘ நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா ? ‘ என்ற பாடல் தொடங்கி  ‘ மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா ? ‘ பாடல் வரை நாளும் ஒலித்துக்கொண்டே இருக்கும் .உடல் மெலிந்த அறுபது வயது மூதாட்டி வெள்ளையம்மாள் பகலெல்லாம் மாடியின் முகப்பில் ( Balcony ) இரும்பு நாற்காலியில் அமர்ந்து வேடிக்கைப் பார்ப்பதும் , பிரகாச வானில் கூடிக் கலையும் மேகங்களின் உருவங்களைக் கண்டும் , பறவைகளையும் பார்த்தவாறே பொழுதைக் கழிப்பார்.இரவில் உறக்கம் பகையாகிப் போக பழைய பாட்டுக்களே துணையாகிப் போகும் போலும் அந்தத் தனிமையின் கைதிக்கு.இவ்வாறாகக் காலம் உருண்டோட வெள்ளையம்மாள் வசிக்கும் வீட்டிற்கு பக்கத்தில் உள்ள மாடி வீட்டிற்கு புதிதாக ஒரு குடும்பம் குடி வந்தது. தனசேகர் , மேகலா தம்பதியும் அவர்களது ஒரே மகன் வினோத்தும் தான் அந்தக் குடும்பம்.நாட்கள் செல்ல செல்ல தனசேகரும் , எப்போதும் தனிய