Posts

எங்கே நிம்மதி?

Image
வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் வெவ்வேறு விதமான மனிதர்களைக் காலம் அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கும். அந்தந்த நேரங்களில் நமக்கு எது ஒன்றையும் குறித்த புரிதலை மேம்படுத்துவதற்காகவும், ஏதோ ஒன்றை உணர்த்துவதற்காவும்,  வாழ்நிலை மேம்பாட்டிற்கும் காலம் நிகழ்த்தும் ஒரு நிகழ்வு.  நமது திறமைகளை, நிறைகுறைகளைக் கண்டு சொல்பவர், வழிகாட்டி, முன்மாதிரி என்று பலவிதமான மனிதர்களை நித்தம் சந்தித்த வண்ணம் இருக்கிறோம். இதில் சில மனிதர்கள் நம்மை அறியாமலேயே நமக்குள் ஏற்படுத்திப் போகும் தாக்கம் கவனிக்கத்தக்க ஒன்று. சமீபத்தில் எனக்குப் பரிச்சயமான சில நபர்களிடமிருந்து அந்த மாதிரியான புரிதலையும், சிலவற்றைக் குறித்த பார்வையையும் விசாலப்படுத்திக் கொள்ளமுடிந்தது. அப்படி நான் சந்தித்த ஒருவர் இரயில்வே துறையில் அரசுப் பணியாளராக உள்ளவர், இருந்தும் நூலகத் துறையின் மீது விருப்பம் கொண்டு தொலைநிலைக் கல்வியில் நான் பயிலும் அதே ஆண்டில் என்னோடு வகுப்பிற்கு வந்திருந்தார். அரசுப் பணிக்காக இலட்சக்கணக்கில் பலர் போட்டித் தேர்வுக்குப் பல வருடங்கள் தயாராகிக் கொண்டும், கிடைத்துவிடாதா என்று எதிர்பார்த்திருக்க நீங்கள் அது கிட...

லைஃப் அட் பாட்டோம் ஆஃப் தி டாப் Life at bottom of the (spinning) top.

சரியான பராமரிப்பு இல்லாத இலவச கழிப்பிடத்தின் நாற்றம் வீசிக்கொண்டிருக்கும் இடத்திற்கு அருகில் போதாக் குறைக்குக் குப்பைத் தொட்டியும் சேர்ந்து கொண்டது " இந்தக் கோவிலுக்கு வந்தாலே இதான் பிரச்சனை, இவ்ளோ பேர் வர இடத்த இப்படி சுத்தம் இல்லாம வச்சிருக்காங்க"  என்று மூக்கை மூடிக் கொண்டு சிடுசிடுவென முணங்கிப் போனார்கள் பலர். அந்தக் கழிவறைக்கு வெளியே  நவரத்னநிற பாசிகளையும் , ஸ்படிக மாலைகளையும் விற்றுக் கொண்டிருக்கும் பெண்களிடம்  விலையை விசாரித்து பேரம் பேசிக் கொண்டே கழிப்பறைக்குள் செல்வதற்கு வரிசையில் காத்திருந்தார்கள். ருத்ராட்சம், கருங்காலி மாலை, அதை அணிந்து கொள்வதன்  மகிமைகளைச் சொல்லி விற்பனைக்கான பேரம் நடந்து கொண்டிருந்தது. மின் விளக்கு ஒன்று மினுக் மினுக்கென்று  எரிகையில் அந்தப் பாசிகள் தன்னை அசல் இரத்தினங்களாகப் பரிமாணித்துக் கொண்டிருப்பதை, கோவிலைச் சுற்றி முடித்து அங்கே சில தூரம் தள்ளி உட்கார்ந்து கொண்டு இதையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.எனக்கு அருகில் எத்தனையோ மக்கள் புரிந்த மொழியிலும் புரியாத மொழியிலும் பேசிக் கொண்டிருந்தனர் அவைகள் வேண்டுதலாகவோ புலம்...

" ஜஸ்ட் சிம்ப்லிஃபை தி திங்க்ஸ் "

எளிமையாகப் புலப்படுகிற விஷயங்களையும் நாம் ஒரு குறிப்பிட்ட பருவத்திற்குப் பிறகு எத்தனை சிக்கல்கள் உடைய ஒன்றாகப் பரிமாணிக்கத் தொடங்கி விடுகிறோம். உதாரணமாக நன்கு பரிச்சயமான ஒருவரிடம், நன்றாகப் பழகிக் கொண்டிருக்கிற ஒருவரிடம் இருந்து சில நாட்களுக்கு எந்த வித அழைப்பும், தொடர்புமற்றுப்போய் இருக்கும் சமயங்களில் நாம் என்னவெல்லாம் முடிச்சுப் போட்டு, எத்தனை சிக்கலான ஊகங்களையெல்லாம் எண்ண ஓட்டத்தில் கலந்து ஒரு அவசியமற்ற பரிதவிப்பை, உறவையே இழந்து விட்ட ஒரு பதற்றத்தை, தேவையற்றச் சிந்தனைகளால் நம்மை நிரப்பியிருக்கிறோம். குழந்தைப் பருவத்தில் அல்லது பள்ளியில் படிக்கும் நாட்களில் கூட நாம் இப்படி மிதமிஞ்சிய அர்த்தமில்லாத சிந்தனைகளில் நம்மைத் தொலைத்திருந்தோமா?. அர்த்தமற்றக் கவலைகளை நாமே உண்டாக்கி உள்ளுக்குள்ளேயே புழுங்கிக் கொண்டிருந்தோமா?. இல்லை, காலப்போக்கில் வந்து சேர்ந்தவை தான் இந்தக் கசடுகள் எல்லாமே.  இதென்ன உளவியல் சார்ந்த சிந்தனை திடீரென்று, காரணம் ஒரு பள்ளி மாணவன் என்னிடம் கொடுத்த கணக்கிற்கு விடை காண முயன்ற போது இந்த மாதிரியான விஷயங்களை என்னிடத்தில் நானே அடையாளம் கண்டு கொண்டதால் தான். "உங்களுக்க...