துறவிலும் துரத்தும்
துறவிலும் துரத்தும்
காசிக்குப் பயணம் மேற்கொண்டு விவேகானந்தர் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தார். வழியில் மரத்தின் நிழலில் அமர்ந்து கிராமத்துக்காரர் ஒருவர் ஹூக்காவைக் கொண்டு புகைப்பிடித்துக் கொண்டிருக்க சுவாமிக்கும் புகைக்க வேண்டும் என்ற எண்ணம் வரவே , அவரிடம் சென்று கேட்ட போது , " சாமி , நான் துப்புரவுத் தொழிலாளி , நீங்க நான் உபயோகப்படுத்துனத எப்டி சாமி ? " என்று சொன்னதும் விவேகானந்தரும் அவ்விடம் விட்டு நகர்ந்து சென்றார் . சிறிது தூரம் நடந்து சென்ற பிறகு ,
" நான் ஒரு துறவி , சாதி மத வேறுபாடு பார்த்து நான் நடந்து கொள்வது முறையாகாது , நான் இவ்வாறு ஏன் செய்தேன் " என எண்ணி தன் தவறை உணர்ந்து மீண்டும் அவரிடம் சென்று ஹுக்காவை வாங்கி இரண்டு இழுப்பு இழுத்துவிட்டார். அமெரிக்காவில் ஆற்றிய உரையில் உலகோரைத் தம் உறவாய் ஏற்க தயங்காத சுவாமிகளின் மனம் சொந்த நாட்டு மண்ணில் உள்ள ஒரு தூய்மைப் பணியாளரின் வார்த்தையைக் கேட்டதும் சில நிமிடம் அவர் காட்டிய தயக்கம் ஏன் ? ஆழப்பதிந்து விட்ட ஒன்று துறவிலும் துரத்துகையில் சுயநல மனிதர்கள் நாமெல்லாம் கோசமிடுவோம்
ஒழிப்போம் ! ஒழிப்போம் ! சாதி மத பேதம் ஒழிப்போம் !
Comments
Post a Comment